User Login

Welcome To Living Word Ministries

Living Word Ministries was founded in 1994 by Rev. J. Harris, who is the senior pastor of Living Word Church. Rev. S. Solomon serves as the assistant pastor of the church. They preach the uncompromising word of God with the anointing of the Holy Spirit. God confirms His holy word with signs and wonders in the lives of the hearers. As a result, the Church is one of the fastest growing ones in the province. New believers are added to the church daily. The kingdom of God is extended and the name of the Lord Jesus is glorified.

what's new?

கிறிஸ்துவுக்குள் ராஜாக்களாயிருக்கிறோம்

"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும், என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக" (வெளிப்படுத்தல் 1:6). பாவத்தினிமித்தம் பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை தேவன் இயேசுவின் இரத்தத்தினாலே பாவங்களற கழுவினது மட்டுமல்ல, நம்மை ராஜாக்களாகவும் ஆக்கியிருக்கிறார் என்று இந்த வசனத்திலே பார்க்கிறோம். மனிதன் ராஜாவைப்போல அரசாள வேண்டுமென்பது தேவனுடைய பூர்வகால திட்டம். ஆகவேதான் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினபோது தேவன் இப்படிச் சொன்னார்: "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்" (ஆதியாகமம் 1:26-28).  "ஆளக்கடவர்கள்", "ஆண்டுகொள்ளுங்கள்" என்கிற பதங்களை கவனித்தீர்களா? யார் ஆளுகை செய்வார்கள்? அடிமைகளா? இல்லை! ராஜாக்கள் தான் ஆளுகை செய்வார்கள். தேவன் மனுக்குலத்தை அடிமைகளாக அல்ல, ஆளுகை செய்கிற ராஜாக்களாக உண்டாக்கினார். தேவன் ராஜாதி ராஜா. அவர் சர்வத்தையும் ஆளுகிறவர். அவர் மனிதனை அவரைப் போலவே ஆளுகை செய்கிற ஒரு குட்டி ராஜாவாக உண்டாக்கினார். ஆனால், மனிதன் பிசாசின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, பாவம் செய்தபோது ஆளுகையையும், ராஜரீகத்தையும், மகிமையையும் இழந்து ஒரு அடிமையாகி விட்டான் என்று வேதத்திலே பார்க்கிறோம். பிசாசு மனிதனை ஆண்டுகொண்டான். பாவமும், மரணமும், பிசாசின் தீமைகளும் மனிதனை ஆண்டுகொண்டது. பாவத்தையும், வியாதியையும், தரித்திரத்தையும் கீழ்ப்படுத்தி ஒரு ராஜாவைப்போல வாழ வேண்டியவன் அவைகளுக்கு அடிமைப்பட்டுப் போனான் என்பது வருந்தத்தக்க ஒரு உண்மை. கெம்பீரமாய் வாழ வேண்டியவன் பரிதாப நிலமைக்குள் விழுந்து விட்டான். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் மனிதனை விழுந்துபோன நிலமையிலே விட்டு விடவில்லை. அவனை அதிலிருந்து தூக்கியெடுத்து மறுபடியும் அவனை ராஜாவாக்கும்படி அவரே இயேசு என்கிற பெயரிலே வந்து சிலுவையிலே பாடுபட்டார். இயேசுவின் சிலுவைப்பாடுகள் பாவத்திலே விழுந்து கிடக்கிற மனிதனை தூக்கியெடுத்து அவனை ராஜாவாக்குகிறது என்று வேதம் போதிக்கிறது. இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ராஜாக்களாயிருக்கிறார்கள். ஒரு நாட்டுக்கு ஒரு ராஜா அல்லது எங்கோ ஒரு ராஜா என்றல்லாமல் இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாருமே ராஜாக்களாயிருக்கிறோம் என்று வேதம் திட்டவட்டமாய்ப் போதிக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு என்ன சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள்.  "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேதுரு 2:9).  தேவன், நம்மை 'ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்' என்று சொல்லுகிறார். நாம் பிச்சைக்கார கூட்டமல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன் அந்தகார இருளிலே கிடந்தோம். பிசாசின் ராஜ்யத்திலே அவனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால் இப்பொழுதோ, ஒளியின் ராஜ்ஜியத்துக்குள்ளே வந்த நம்மை தேவன் ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று அழைக்கிறார். அநேக தேவனுடைய மக்கள் தங்களை இப்படி எண்ணுகிறதில்லை. நான் குப்பை, தூசி, ஒன்றுக்கும் உதவாத பாவி என்று சொல்லுகிறார்கள். இதைத் தாழ்மை என்று நினைக்கிறார்கள். இது தாழ்மையல்ல, அறிவீனம். நாம் குப்பைகளல்ல, தூசியல்ல, பாவிகளல்ல. நாம் பிசாசின் கரத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களாய், ராஜாக்களாய் இருக்கிறோம். இந்த எண்ணத்தை மனதிலே பதிக்க வேண்டும். இதுதான் உண்மையான தாழ்மை. தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பதுதான் உண்மையான தாழ்மை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் அநேகர் தங்களை தேவனுக்கு முன்பாக பிச்சைக்காரர்களைப் போல உணருகிறார்கள். இதையும் தாழ்மை என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய ஜெபங்களெல்லாம் 'கெஞ்சுகிறேன்', 'மன்றாடுகிறேன்' என்று பிச்சைக் கேட்பது போலவே இருக்கிறது. இவர்கள் கர்த்தரிடத்தில் பெரிய காரியங்களைக் கேட்பதும் இல்லை, பெற்றுக் கொள்வதும் இல்லை. ஐநூறு ரூபாயையோ அல்லது ஆயிரம் ரூபாயையோ கேட்கிற பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஒருபோதும் அவ்வளவு பெரிய தொகையை அவர்கள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுடைய புத்தி பிச்சைக்கார புத்தி. அதேபோலத்தான் தேவனுக்கு முன்பாக பிச்சைக்காரர்களைப் போல உணருகிற தேவனுடைய பிள்ளைகளும் பெரிய காரியங்களைக் கேட்கவும் மாட்டார்கள்; அவைகளைப் பெற்று அனுபவிக்கவும் மாட்டார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயிருக்கிறோம் என்கிற உணர்வுள்ளவர்கள் பெரிய நன்மைகளை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளுகிறவர்களாய் இருப்பார்கள். நம் தேவன் பெரியவர், அவரிடத்தில் நாம் உரிமையோடு வந்து கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் நம்மைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள்.  "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபேசியர் 2:7).     'உட்கார செய்யப் போகிறார்' என்று சொல்லாமல், 'உட்காரவும் செய்தார்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அநேக தேவனுடைய மக்கள் எதிர்காலத்திலே பரலோகத்துக்குப் போன பிறகு இயேசுவோடுகூட சிங்காசனத்தில் வீற்றிருப்போம் என்று நம்புகிறார்கள். அது வேத வசனம் சொல்லுகிற சத்தியம்தான். ஆனால், இந்த வசனம் அதைப் பற்றியதல்ல. இந்த வசனம், நாம் இரட்சிக்கப்பட்ட அன்றைக்கே இயேசுவோடுகூட ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, அவரோடேகூட உன்னதங்களிலே உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் என்று […]

Read More...

மனதிலே மறுரூபமாகுங்கள்

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (எபிரெயர் 10:23). மனிதன் ஒரு ஆவியாயிருக்கிறான், அவனுக்கு ஒரு மனது இருக்கிறது, அவன் சரீரம் என்கிற கூட்டுக்குள் குடியிருக்கிறான். மனிதன் வெறும் சரீரமல்ல. சரீரம் இந்த பூமியிலே மனிதன் வாழ்வதற்காக தேவன் கொடுத்த ஒரு வீடாயிருக்கிறது. மனிதனுடைய ஆவிதான் கண் என்கிற ஜன்னல் வழியாக பார்க்கிறது; காது வழியாக கேட்கிறது; வாய் வழியாக பேசுகிறது. சரீரத்தை விட்டு ஆவி போகுமானால் கண் நன்றாயிருந்தாலும் பார்க்காது; காது நன்றாயிருந்தாலும் கேட்காது; வாய் நன்றாயிருந்தாலும் பேசாது. அப்படியானால் மனிதன் ஒரு ஆவிதான் என்பது தெளிவாய் விளங்குகிறது. அதுமட்டுமல்ல, தேவன் ஆவியாயிருக்கிறார் என்று வேதத்திலே பார்க்கிறோம். மனிதன் ஆவியிலே தேவனோடு இணைந்து, அவருடைய எண்ணங்களோடு ஒருமனப்பட்டு, அவரோடு உறவுகொண்டு, அன்பிலும் ஐக்கியத்திலும் வாழும்படிதான் தேவனால் உண்டாக்கப்பட்டான். அந்த உறவின் அடிப்படையிலேதான் மனிதனுக்கு எல்லா நன்மைகளும் கொடுக்கப்படுகிறது என்று வேதம் திட்டமாய்ப் போதிக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பாக வாழ்ந்தான். பகலின் குளிர்ச்சியான வேளையிலே ஆதாமும் ஏவாளும் தேவனோடு உறவுகொண்டார்கள். அதின் விளைவாக ஏதேன் தோட்டத்தின் இன்பத்தை அனுபவித்தார்கள். ஆனால், ஆதாம் பாவம் செய்தபோது ஆவியிலே தேவனைவிட்டுப் பிரிந்தான். மனிதன் தேவனில்லாமல் தன்னிச்சையாக வாழ ஆரம்பித்தான். ஆகவே, தேவனிடத்திலிருந்து வந்த எல்லா நன்மைகளும் போய்விட்டது. தேவன் மனிதனுக்கு கொடுத்த உயர்ந்த ஸ்தானத்திலிருந்து விழுந்து விட்டான். அவனுடைய ஆவிக்குள்ளே பாவம் வந்துவிட்டது, அது பிசாசின் சுபாவம் நிறைந்ததாக மாறிவிட்டது. விழுந்துபோன மனது சிறிய எண்ணங்களுடையதாய் மாறிவிட்டது. மனது தேவனுக்கு விரோதமாய் சிந்திக்க ஆரம்பித்தது. பிசாசு மனிதனுடைய மனதை ஆட்கொண்டு, பாவ எண்ணங்களாலும், வியாதியின் எண்ணங்களாலும், தரித்திரத்தின் எண்ணங்களாலும், தோல்வியின் எண்ணங்களாலும் அதை நிறைத்துப் போட்டான். உயர்ந்த நிலையிலே வைக்கப்பட்டிருந்த மனது புழுதியிலே விழுந்து விட்டது. வேதம், "ஒரு மனுஷனுடைய எண்ணங்கள் எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்" (நீதிமொழிகள் 23:7) என்று சொல்லுகிறது. அதாவது, ஒரு மனிதனுடைய எண்ணங்களின் அடிப்படையிலேதான் அவனுடைய வாழ்க்கை இருக்கும் என்று இந்த வசனம் போதிக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்லப்போனால், ஒரு மனிதனுடைய எண்ணங்கள் எப்படியோ, அப்படியே அவனுடைய எதிர்காலமும் இருக்கும். இரட்சிக்கப்படாத மனிதர்கள் எல்லாரும் தங்கள் மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அவர்கள் மாம்சத்துக்குரியவைகளை சிந்தித்து, மாம்சத்துக்குட்பட்ட வாழ்க்கை வாழுகிறார்கள். ஆனால், கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட நாம் பாக்கியவான்கள். நம்முடைய சிலாக்கியம் என்னவென்றால், நாம் ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு புதுச்சிருஷ்டிகளாயிருக்கிறோம். "அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபேசியர் 2:5). "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் அவன் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17). இந்த வசனங்களின் அடிப்படையில் இரட்சிக்கப்பட்ட நாம் ஆவியிலே தேவ சாயலாய் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனைப் போலவே இருக்கிறோம். நாம் இரட்சிக்கப்பட்ட நாளிலே நம்முடைய மனது இரட்சிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். மனது அதே பழைய மனதுதான். மனதைப் புதிதாக்கும்படிதான் தேவன் அவருடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு மனதை புதிதாக்க வேண்டிய ஒரு கடமையைச் செய்ய வேண்டும். யாக்கோபு என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள்: "ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்திலே நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்" (யாக்கோபு 1:21). நம்முடைய ஆவி இயேசுவை ஏற்றுக்கொண்ட நாளிலே இரட்சிக்கப்பட்டு விட்டது. அது கடந்த காலத்திலே நடந்த ஒரு நிகழ்வு. ஆனால், நம்முடைய ஆத்துமா அல்லது மனது நிகழ்காலத்திலே வசனத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆகவேதான் நாம் ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஆலயத்திற்கு வந்து தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டும். இரட்சிக்கப்பட்டவர்களில் சிலர் வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஆலயத்திற்குப் போவார்கள். இன்னும் சிலர், தங்கள் வாழ்க்கையிலே மூன்று முறைதான் தேவாலயத்துக்கு செல்வார்கள். முதல் முறை பெற்றோர்கள் பெயர் வைக்க அவர்களை ஆலயத்திற்கு கொண்டு செல்வார்கள். இரண்டாவது முறை திருமண நாளிலே ஆலயத்திற்குப் போவார்கள். மூன்றாவது முறை மரித்தவுடனே ஆலயத்திற்கு செல்வார்கள். அப்படிப்பட்டவர்களும் கிறிஸ்தவ வட்டாரத்தில் இருக்கிறார்கள். ஆனால், வாழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள் மனதை புதிதாக்கியே தீர வேண்டும். மனம் புதிதாக வேண்டுமானால் தேவனுடைய வார்த்தை வல்லமையாய் பிரசங்கிக்கப்படுகிற ஆலயத்திற்குச் சென்று, கேட்பதற்கு தீவிரப்பட வேண்டும். மனம் புதிதாக்கப்படும்போதுதான் இந்த பூமியிலே தேவன் நமக்கு வைத்திருக்கிற உயர்ந்த வாழ்க்கையை நாம் பெற்றனுபவிக்க முடியும். ரோமர் 12:2 இல், 'மறுரூபமாகுங்கள்' என்கிற வார்த்தை ஒரு கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறுகின்ற அனுபவத்தைக் குறிக்கிறது. ஒரு கூட்டுப்புழுவுக்கும் பட்டாம்பூச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை யோசித்துப் பாருங்கள். இரண்டையும் ஒப்பிடவே முடியாது. கூட்டுப்புழு பார்க்க அருவருப்பாய் இருக்கிறது, தரையிலே ஊர்ந்து ஊர்ந்து செல்லுகிறது, இலைகளை உட்கொள்ளுகிறது. ஆனால், அதே கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாற்றமடைந்த பிறகு பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறது. வானத்திலே பறந்து செல்லுகிறது. மலர்களிலே உட்கார்ந்து தேனைக் குடிக்கிறது. அதற்குள்ளே ஏற்பட்ட மாற்றம் அதின் வாழ்க்கைத் தரத்தை எவ்வளவு மாற்றிவிட்டது என்பதைப் பாருங்கள். அதேபோலத்தான் முதலாவது விசுவாசிகளுடைய மனதிலே மாற்றம் ஏற்பட வேண்டும்; […]

Read More...

செழிப்பு - 3

"தமது ஊழியக்காரருடைய செழிப்பை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்," சங் 35:27 தமிழ் வேதாகமத்தில் தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று வருகிறது. ஆங்கில வேதாகமங்களில் செழிப்பு என்ற பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே சரிதான். தேவன் தம்முடைய ஊழியக்காரனுடைய சுகத்தையும், செழிப்பையும் விரும்புகிற தேவன். ஊழியக்காரன் என்றவுடன் வேலையை விட்டுவிட்டு முழுநேர ஊழியம் செய்கிரவர்களைத்தான் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், பழைய ஏற்பாட்டில், தேவனுடைய தாசர்கள் எல்லாரும் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். ஆகவே, இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் இந்த வசனம் பொருந்தும். நண்பர்களே, நீங்கள் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொன்டவர்களா? அப்படியானால், நீங்கள் செழிப்பாக இருக்க உங்கள் தேவன் விரும்புகிறார். உங்கள் சபை போதகர் அதை விரும்பாமல் இருக்கலாம், உங்கள் உடன் விசுவாசிகள் அதை விரும்பாமல் இருக்கலாம். அதினால் எண்ண? நம்மை படைத்த தேவனுடைய விருப்பம் எண்ண என்பதுதான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. அவர் விரும்பினால் மட்டும் போதாது. அவருடைய விருப்பத்தை நீங்கள் புரிந்துகொண்டு, அவருடைய விருப்பத்தை உங்கள் விருப்பமாக மாற்ற வேண்டும். அவ்விதமாக மாற்றும் போது தேவனுடைய விருப்பம் உங்கள் வாழ்வில் நிறைவேறும். அவங்க அவங்க தலைவிதிப்படி அவங்க அவங்களுக்கு நடக்கும் என்றார் ஒரு போதகர். தச;ஐவிதியை மாற்றவே நம் தேவன் உயிரோடு இருக்கிறார், அவருடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுள்ளதாக இருக்கிறது. "தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுள்ளதாயும் இருக்கிறது" எபி 4:12. அவருடைய வார்த்தை நம் தலைவிதியை மாற்ற வல்லமை உள்ளதாக இருக்கிறது. யாருக்கு? தேவனுடைய வார்த்தைகளை கண்டு பிடிக்கிரவர்களுக்கு. ஆகா! என் தேவன் என்னைப்பற்றி இவ்வளவு நல்ல விருப்பத்தை உடையவராக இருக்கிறாரா? அப்படியானால் நான் தரித்திரனாக இருக்க அவசியம் இல்லை. என் முன்னோர்கள் தரித்திரராக இருந்தார்கள். அவர்கள் இந்த ஆண்டவரை அறிந்து கொள்ளவில்லை. அவருடைய விருப்பத்தை புரிந்துகொள்ளவில்லை. நான் தரித்திரனாக இருக்கப் போவதில்லை. என் பிள்ளைகள் தரித்திரராக இருக்கப் போவதில்லை என்ற தீர்மானத்துக்கு வாருங்கள் நண்பர்களே! உங்கள் தலைவிதி மாறுவதற்கு இந்த தீர்மானம் அவசியம், ஏனென்றால் நம் தேவன் எதையும், யார் மேலும் திணிக்க மாட்டார். அவர் மிக மிக மென்மையானவர். நாமாக விரும்பி கேட்க்கும் போது மாத்திரமே தேவனுடைய செழிப்புகளும், ஆசீர்வாதங்களும் நம் வாழ்வில் பலிக்கும். உதாரணமாக ஒருவரும் கெட்டுப் போவது தேவனுக்கு விருப்பம் இல்லை. துன்மார்க்கர்கள் தன துன்மார்க்கத்திலே சாகிறது எனக்கு எவ்வளேவேனும் பிரியமோ, அவன் மனந்திரும்பி பிழைப்பதை அல்லவோ நான் விரும்புகிறேன் என்று ஆண்டவர் உரைத்தார். (எசே 18:23) ஒருவனும் நரகத்துக்கு போவது ஆண்டவருக்கு விருப்பம் இல்லை. இதுவரை ஒருவனையும் தேவன் நரகத்துக்கு அனுப்பினதும் இல்லை. ஆனால், தேவனுடைய விருப்பம் Automatic காக நம் வாழ்வில் நடப்பதில்லை. மனிதன் இயேசுவை ஆண்டவராக உள்ளத்தில் விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது மாத்திரமே இது பலிக்கும். ஆண்டவர் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் வாசற்படியிலும் நின்று தட்டிக் கொண்டே இருக்கிறார். "இதோ வாசர்ப்படியில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன், ஒருவன் என் சத்தத்தை கேட்டு கதவை திறந்தால் நான் உள்ளே பிரவேசிப்பேன் என்று ஆண்டவர் உரைக்கிறார்." (வெளி 3:20) உடைத்துக்கொண்டு, ஒரு நிமிடத்தில் உள்ளே அவர் வந்துவிடலாம். அவர் ஒருபோதும் அப்படி செய்வதில்லை. அவர் மனிதனுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார். மனிதனுடைய விருப்பமின்றி, அவர் எதையும் கட்டாயப்படுத்தி செய்வதில்லை. ஆகவே அவர் காத்துக்கொண்டு வெளியே நிற்கிறார். கதவின் கொண்டி மனிதன் கையிலேயே இருக்கிறது. திறந்தால் உள்ளே வந்து அவனை ஆசீர்வதிக்கிறார். அதுபோலவே செழிப்பு அவருடைய ஆசையாக இருந்தாலும், அது தானாக நம் மேல் பழுத்து விழாது. நாம் தேவனுடைய ஆசையை வேத புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டு நாம் அதை ஆசைப்படும்போது அது நம் வாழ்வில் பலிக்கும். தரித்திரம் என்ற தலையெழுத்துக்கு கீழ் நாம் வாழ்நாளெல்லாம் தவிக்க தேவன் விரும்பவில்லை. ஆகவே நண்பர்களே! ஆண்டவர் பார்த்து சிலரை உயர்த்துகிறார், சிலரை தாழ்த்துகிறார். என்னவோ, அவருடைய சித்தம் நமக்கு புரியாது என்று அநேகர் பேசிக்கொண்டு இருந்த இடத்திலயே இருப்பது போல நீங்கள் இராதேயுங்கள். தெய்வீக செழிப்பில், தேவனுடைய பங்கு (Godward part) இருக்கிறது. மனிதனுடைய பங்கு (Manward part) ஒன்று இருக்கிறது. மனிதனுடைய பங்கை அவன் நிறைவேற்றும் போது மாத்திரமே, தேவனுடைய விருப்பங்கள் அவன் வாழ்வில் நிறைவேறுகிறது. நூற்றுக்கு நூறு தேவன் தான் பொறுப்பு என்று எண்ணுவது முற்றிலும் தவறு. நீங்கள் செழித்திருக்க தேவன் நூற்றுக்கு நூறு விரும்புகிறார். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? விரும்புவீர்களானால் ஆம்! ஆண்டவரே நீர் என் செழிப்பை விரும்புகிற தேவன் என்று வாயினாலே சத்தமாக பேச ஆரம்பியுங்கள். எல்லா ஆசீர்வாதங்களும் வாயில் தான் ஆரம்பிக்கிறது. உம்முடைய வார்த்தையை நான் நம்புகிறேன், அப்படியே எனக்கு ஆகக்கடவது ஆமென் என்று திரும்ப திரும்ப சொல்லுங்கள். ஆண்டவரே உம்முடைய வார்த்தையின்படி எனக்கு செய்கிறீர், நன்றி என்று ஜெபியுங்கள். சூழ்நிலையை பாராதிருங்கள். மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை கேளாதிருங்கள். ஏனென்றால், நீங்கள் ஏழையாக இருப்பதையே மக்களில் அநேகர் விரும்புகிறார்கள். நம்முடைய தேவன் ஒரு மனிதன் அல்ல. விஷேசமாக உங்களுடைய இனஜனத்தார் நீங்கள் செழித்திருப்பதை விரும்பவில்லை. தேவன் உங்கள் இனஜனத்தை விட மேலானவர்., நல்ல எண்ணங்களைக் கொண்டவர். அவருடைய வார்த்தையைப் பற்றி கொள்ளுங்கள். தேவனுடைய […]

Read More...

Upcoming Events

Online Giving

Quick Links

Home  /   About Us  /   I'm New  /   Events  /   Online Giving  /   Live Service  /   Contact Us

Service Times

Sunday - (Weekly Service) :
09:00 AM IST

Tuesday - (Bible Study) :
06:45 PM IST

Saturday - (Fasting Prayer) :
10:00 AM IST

Contact Us

Living Word Ministries
Madakulam Road,
Madurai - 3
Phone : +91 452 2380300
Mobile : +91 97892 80300

Socialize with us